/* */

திருவாரூரில், தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.45 லஞ்சம் பெறுவதை கண்டித்து திருவாரூரில் பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருவாரூரில், தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
X

திருவாரூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு 45 ரூபாய் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் லஞ்சமாக பெறுவதை கண்டிக்கும் விதமாக பாரதீய ஜனதா கட்சியின் விவசாய பிரிவு சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

திருவாரூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகளிடம் 45 ரூபாய் பெறும் அதிகாரிகளுக்கு எதிராகவும் அதை கண்டுகொள்ளாத தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க. விவசாய அணி மாநில துணைத்தலைவர் சிவ காமராஜ், விவசாய அணி மாநில செயலாளர் கோவி சந்துரு, மாவட்ட தலைவர் ராகவன், மாவட்ட துணைத்தலைவர் செந்தில் அரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Oct 2021 12:18 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  5. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  7. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  8. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!