திருவாரூரில், தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.45 லஞ்சம் பெறுவதை கண்டித்து திருவாரூரில் பா.ஜ.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு 45 ரூபாய் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் லஞ்சமாக பெறுவதை கண்டிக்கும் விதமாக பாரதீய ஜனதா கட்சியின் விவசாய பிரிவு சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
திருவாரூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகளிடம் 45 ரூபாய் பெறும் அதிகாரிகளுக்கு எதிராகவும் அதை கண்டுகொள்ளாத தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க. விவசாய அணி மாநில துணைத்தலைவர் சிவ காமராஜ், விவசாய அணி மாநில செயலாளர் கோவி சந்துரு, மாவட்ட தலைவர் ராகவன், மாவட்ட துணைத்தலைவர் செந்தில் அரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.