/* */

திருவாரூர் அருகே ஏடிஎம்-ஐ கேஸ் கட்டர் கொண்டு கொள்ளை முயற்சி : ஒருவர் கைது,3 பேர் தப்பி ஓட்டம்

திருவாரூர் அருகே ஏடிஎம்-ஐ கேஸ் கட்டர் கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ,3 பேர் தப்பி ஓட்டம், ஒருவர் கைது செய்யப்பட்டார்.தடுக்க முயன்றவர் கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருவாரூர் அருகே ஏடிஎம்-ஐ கேஸ் கட்டர் கொண்டு  கொள்ளை முயற்சி : ஒருவர் கைது,3 பேர் தப்பி ஓட்டம்
X

நள்ளிரவில் கொள்ளையால் கூடிய கூட்டம்.

திருவாரூர் அருகே கூடூர் கிராமத்தில் ராஜராஜன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் எஸ்பிஐ ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று நள்ளிரவு எஸ்பிஐ ஏடிஎம்-ஐ மர்ம நபர்கள் உடைக்கும் சத்தம் கேட்டு அருகே இருந்த வீடுகளில் உள்ளவர்கள் தடுக்க முயன்றுள்ளனர்.

மேலும் இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் உடனடியாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுவந்த போலீசார் விரைந்து வந்து லெட்சுமாங்குடி பகுதியை சேர்ந்த மதன் என்பவரை பிடித்தனர். இதில் மற்ற மூவர் ஒரு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து கொள்ளையர்கள் சிறிது தூரம் சென்ற பின்னர் மதன் என்பவரை மீட்டு அழைத்துச் செல்வதற்காக திரும்பி அதிவேகத்தில் வந்துள்ளனர். அப்போது சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ராஜராஜனின் மாமனார் தமிழரசன் (60) கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டபோது கொள்ளையர்கள் வைத்திருந்த கத்தியால் நெஞ்சில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கடந்த புதன்கிழமை ஏடிஎம் மையத்தில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் கடையிலிருந்து கேஸ் கட்டர் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெல்டிங் பட்டறை கொள்ளை குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், ஏ.டி.எம் கொள்ளை முயற்சியில் படுகொலை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Updated On: 19 Jun 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.