/* */

திருவாரூரில் நகைக்கடையில் மிளகாய்ப் பொடி தூவி 5 பவுன் சங்கிலி திருட்டு

அப்பகுதி மக்கள் கவிதாவை மடக்கிபிடித்து, அவரிடம் இருந்த நகையை பறிமுதல் செய்து, திருவாரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

HIGHLIGHTS

திருவாரூரில் நகைக்கடையில் மிளகாய்ப் பொடி தூவி 5 பவுன் சங்கிலி திருட்டு
X

திருவாரூரில் நகைக்கடை மிளகாய்ப்பொடி தூவி திருடிய கவிதாவின் கணவர் ஆட்ரோ ஓட்டுனர் கணேசன்

திருவாரூரில் பரபரப்பான கடைவீதியில் நகைக்கடையில் மிளகாய்ப் பொடி தூவி 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த கிரன்குமார் (42). இவர்திருவாரூர் அலிவலம் சாலையில் அனிதா ஜுவல்லரி என்கிற நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு புலிவலம் விஷ்ணுதோப்பை சேர்ந்த ஆட்ரோ ஓட்டுனர் கணேசன் மனைவி கவிதா (35) என்பவர் நகைக்கடையில் பர்தா அணிந்து நகை வாங்குவது போல் பேசியுள்ளார். திடீரென கடை உரிமையாளர் கிரண் குமார் மீது, மிளகாய்ப் பொடியை வீசி, அங்கிருந்த 5 பவுன் தங்க சங்கிலிகளை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளார். உடனடியாக சுதாரித்த கிரண்குமார் கடையின் வெளியே வந்து சப்தம் போட்டுள்ளார்.

இதைக்கவனித்த அப்பகுதி மக்கள், கவிதாவை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த நகையை பறிமுதல் செய்து, திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து கவிதா மற்றும் கணேசன் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் வீடியோயோவாக வெளியாகியதால் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும், நகைக்கடை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் நகை கடை சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 2 Sep 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  6. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  7. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  10. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...