Begin typing your search above and press return to search.
திருவாரூரில் தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம் அனுசரிப்பு
பெரியாரின் 48வது நினைவு நாளையொட்டி திருவாரூரில் எம்எல்ஏ கலைவாணன் தலைமையில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
HIGHLIGHTS
தந்தை பெரியாரின் 48வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் , திராவிடக் கழகத்தினர் மற்றும் பொதுநல அமைப்புகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.