/* */

விவசாயி பிடித்து வைத்திருந்த மலைகிராம ஆதிவாசி வளர்த்த குதிரை போலீஸாரால் மீட்பு

தனது தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்த அந்தக் குதிரையை பிடித்து தோட்டத்திலேயே கட்டி போட்டு வைத்துள்ளார்.

HIGHLIGHTS

விவசாயி  பிடித்து வைத்திருந்த மலைகிராம  ஆதிவாசி   வளர்த்த குதிரை  போலீஸாரால் மீட்பு
X

போடிநாயக்கனூர் அருகே மூன்று நாட்களாக சிறை பிடித்து வைத்திருந்த மலைகிராம ஆதிவாசி வளர்த்த குதிரையை தோட்டக்காரரிடமிருந்து போலீஸார் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

தேனி மாவட்டம், போடி நாயக்கனுார் அருகே உள்ள சோலையூர் என்ற மலைக்கிராமத்தில் வசிக்கும் ஆதிவாசி பழங்குடியினத்தை சேர்ந்தவர் முத்துக்கருப்பன். இவர் குதிரை வளர்த்து வந்தார். இந்த குதிரை மூன்று நாட்களுக்கு முன்னர் கயிறை அறுத்துக் கொண்டு, அப்பகுதியில் உள்ள முருகன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவரும் தோட்டத்திற்குள் புகுந்ததாம்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயி முருகன், தனது தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்த அந்தக் குதிரையை பிடித்து தோட்டத்திலேயே கட்டி போட்டு வைத்துள்ளார். மூன்று நாட்களாக குதிரைக்கு தண்ணீர், உணவும் கொடுக்காமல் பட்டினியாக இருக்கச் செய்தாராம். இந்நிலையில், குதிரையை தேடி அலைந்த முத்துக்கருப்பன், குதிரை முருகனின் தோட்டத்தில் கட்டிக்கிடப்பதைக் கண்டறிந்தார். இதையடுத்து முருகனிடம், தனது குதிரையை தருமாறு கேட்ட, போது, தனக்கு ரூ.30 ஆயிரம் நஷ்டஈடு தந்தால் மட்டுமே குதிரையை ஒப்படைக்க முடியும் என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மலைகிராமஆதிவாசி முத்துக்கருப்பன், போடி தாலுகா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ,போலீசார் தலையிட்டு குதிரையை மீட்டு முத்துக்கருப்பனிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 26 July 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...