/* */

சாலை விபத்தில் விவசாயிகள் இருவர் பலி

தேனி அருகே சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயிகள் இருவர் சம்பவ இடத்திலேயே பலி. காவல்துறையினர் விசாரணை.

HIGHLIGHTS

சாலை விபத்தில் விவசாயிகள் இருவர் பலி
X

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவக்குமார் (45) பழனிசாமி (55). விவசாயிகளான இருவரும் இன்று மாலை தேனிக்கு வந்து சணல் சாக்குகள் வாங்கிக்கொண்டு ஒரே இருசக்கர வாகனத்திலே வீடு திரும்பினர். அப்போது அரண்மனைப்புதூர் அடுத்துள்ள கோட்டைப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம், இவர்களின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிகழ்விடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌ இது குறித்து பழனி செட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 March 2021 5:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!