/* */

தஞ்சாவூரில் 10 மையங்களில் இன்று தடுப்பூசி - மாநகராட்சி ஆணையர்

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக இன்று 10 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது.

HIGHLIGHTS

தஞ்சாவூரில் 10 மையங்களில் இன்று தடுப்பூசி - மாநகராட்சி ஆணையர்
X

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட, 52 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தற்போது மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் அளவுகள் குறைவாக இருப்பதால் முதலில் வரும் பொதுமக்களுக்கு மட்டுமே தடுப்பூசிக்கான டோக்கன் வழங்கப்படுகிறது.

அவ்வகையில், இன்று தஞ்சை மாநகராட்சி சார்பில் பத்து இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா அரங்கத்தில் 400 நபர்களுக்கும், கரந்தை மாநகராட்சி பள்ளி 100 நபர்களுக்கும், வண்டிக்காரத் தெரு பள்ளியில் 150 நபர்களுக்கும், அண்ணாநகர் பள்ளியில் 150 என பத்து மையங்களில் 1,460 நபர்களுக்கு நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.

எனவே, முதலில் வரும் நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும். மேலும் இன்று அனைத்து மையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது. கோவாக்சின் தடுப்பூசி போடவில்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 July 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!