தஞ்சை மாநகராட்சி சார்பாக 10 மையங்களில், 1600 பேருக்கு தடுப்பூசி
தஞ்சை மாநகராட்சியில் 10 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
தற்போது மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் அளவுகள் குறைவாக இருப்பதால் முதலில் வரும் பொதுமக்களுக்கு மட்டுமே தடுப்பூசிக்கான டோக்கன் வழங்கப்படுகிறது.
இதேபோல் இன்று மாநகராட்சி சார்பில் பத்து இடங்களில் 1600 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா அரங்கத்தில் 400 நபர்களுக்கும், கரந்தை மாநகராட்சி பள்ளி 100 நபர்களுக்கும், வண்டிக்காரத் தெரு பள்ளியில் 150 நபர்களுக்கும், அண்ணாநகர் பள்ளியில் 150 என பத்து மையங்களில் முதலில் வரும் 1,600 நபர்களுக்கு நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுவதற்கான டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று அனைத்து மையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது. கோவாக்ஷீன் தடுப்பூசி போடவில்லை என மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.