/* */

திருமலைச்சமுத்திரத்தில் ஜல்லிகட்டு- 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தஞ்சை அருகே திருமலை சமுத்திரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 850 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.

HIGHLIGHTS

திருமலைச்சமுத்திரத்தில் ஜல்லிகட்டு- 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
X

திருமலைசமுத்திரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி. 

தஞ்சாவூர் அருகே உள்ள திருமலை சமுத்திரத்தில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் மற்றும் கோட்டாச்சியர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மணப்பாறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 850 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வெற்றி காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், குவளை, குக்கர் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 16 April 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்