/* */

பயிர் விளைச்சல் போட்டி:அதிக மகசூல் பெறும் மூன்று விவசாயிகளுக்கு 5 லட்சம் பரிசு

பயிர் விளைச்சல் போட்டியில் அதிக மகசூல் எடுக்கும் முதல் மூன்று விவசாயிகளுக்கு மொத்தம் ரூ 5 லட்சம் பரிசளிக்கப்படும்

HIGHLIGHTS

பயிர் விளைச்சல் போட்டி:அதிக மகசூல் பெறும் மூன்று விவசாயிகளுக்கு 5  லட்சம் பரிசு
X

பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வேளாண் நிதி நிலைஅறிக்கையில் மாநில அளவில் நெற் பயிர், சிறு தானியங்களான கேழ்வரகு, கம்பு, தினை, சாமை, குதிரைவாலி மற்றும் பயறு வகை பயிர்களானது வரை,உளுந்து, பச்சைப்பயறு எண்ணைய் வித்து பயிர்களான நிலக்கடலை,எள் சாகுபடி செய்து, அதிக மகசூல் எடுக்கும் முதல் மூன்று விவசாயிகளுக்குரூ.5. இலட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.

எனவே,மேற்கண்ட பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அதற்கான விண்ணப்பத்தினை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுரூ.150 நுழைவு கட்டணம் செலுத்திஅதன் ரசீது, பயிரிடப்பட்டுள்ள பரப்பின் சான்றாக சிட்டா அடங்கல், நிலத்தின் வரைபடம், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை இணைத்து வேளாண்மை உதவி இயக்குநர் மூலமாக வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் மற்றும் குத்தகைதாரர்களும் இப்போட்டியில் பங்கு பெற தகுதியுடைய வர்கள் ஆவர்.

சன்ன ரகம் பயிரிட்டுள்ள விவசாயிகள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். அறுவடை நிலத்தில் போட்டிக் கான விவரங்கள் அடங்கிய தகவல் பலகை வைக்க வேண்டும். குறைந்த பட்சம் 15 நாட்களுக்கு முன்னர் அறுவடை தேதியை முடிவு செய்து முன்னதாக வேளாண் இணை இயக்குநருக்கு தெரிவிக்க வேண்டும்.

மாநில அளவில் வேளாண் ஆணையரால் நியமிக்கப்பட்ட வேளாண் பிரதிநிதி மற்றும் பயிர் நடுவர்கள் முன்னிலையில் பயிர் விளைச்சல் போட்டி நடைபெறும். போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசுரூ.2.50 இலட்சம், இரண்டாவது பரிசுரூ1.50 இலட்சம், மூன்றாவது பரிசாக ரூ.1. இலட்சம் வழங்கப்படும்.மேலும், பரிசு பெறும் விவசாயி களுக்கு டாக்டர்.நாராயணசாமி விருதும் அதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளும் மேற்காணும் வழி முறைகளை பின்பற்றி மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். இதற்கான நுழைவு கட்டணம் ரூ.100-ஆகும். போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசு ரூ.1. இலட்சம், இரண்டாவது பரிசு ரூ.75,000-, மூன்றாவது பரிசாக ரூ.50,000- வழங்கப்படும்.

மேலும் இவர்களுக்கு பாரத ரத்னா,டாக்டர் எம்.ஜி.ஆர் விருதும் அதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.எனவே விவசாயிகள் அதிக அளவில் இப்போட்டியில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டி, செம்மை நெல் சாகுபடி மற்றும் உளுந்து பயிருக்கு நடைபெற உள்ளது.

இப்போட்டியில் கலந்து கொண்டு; வெற்றி பெறும் விவசாயிகளுக்கு நெற்பயிருக்கு முதல் பரிசு ரூ.15000-, இரண்டாவது பரிசு ரூ.10,000- வழங்கப்படும். பயறு வகை பயிர்களுக்கு முதல் பரிசு ரூ.10000-, இரண்டாவது பரிசுரூ.5,000-வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள தஞ்சை மாவட்ட விவசாயிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர்.தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்கள்.

Updated On: 11 Nov 2023 4:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  6. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  7. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  9. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?