/* */

சுரண்டையில் செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

சுரண்டையில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

சுரண்டையில் செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
X

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியரிடம் மனு வழங்கினர்.

தென்காசி மாவட்டம், சுரண்டை சிவகுருநாதபுரம் அம்மன் சன்னதி தெருவில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் 5 ஜி செல்போன் டவர் அமைக்க கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முயற்சி நடந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 5 ஜி செல்போன் கதிர்வீச்சினால் மனிதர்களின் உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் உயிரினங்கள் அதிகளவில் தீங்கை சந்திக்கும் என கூறி மறியல் செய்தனர்.

இதனால் அப்பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. வேறு இடத்தில் அமைக்க முயற்சித்தும் அங்கும் எதிர்ப்பு வந்ததால் அங்கும் நிறுத்தப் பட்டது. இந்த நிலையில் சிவகுருநாதபுரம் அம்மன் சன்னதி தெருவில் மீண்டும் செல்போன் டவர் அமைக்க முயற்சி செய்ததக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து அந்தப் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் வசந்தன் தலைமையில், புலி பாண்டியன், முருகன், சிவசக்தி, ராமையா, செல்வராஜ், ஜெயம், சரோஜா, ராதா, முத்துலட்சுமி, திருமலைக்கனி, செல்லக்குட்டி, மாரிக்கனி, ராதா, கனக மணி, பாப்பா, மல்லிகா, கனியம்மாள், வெள்ளையம்மாள் உள்ளிட்ட 50-க்கும் அதிகமான பெண்கள் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அவர்கள் தாசில்தார் தெய்வசுந்தரியை நேரில் சந்தித்து செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கினர். மனுவினை பெற்றுக்கொண்ட தாசில்தார் தெய்வசுந்தரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Updated On: 1 March 2023 3:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்