Begin typing your search above and press return to search.
தென்காசி சத்திய சாயி சேவா சமிதி ஆண்டுவிழா ரதோற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
தென்காசியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியின் 46-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ரதாேற்சவம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தென்காசி சத்திய சாயி சேவா சமிதி ஆண்டுவிழாவில் ரதோற்சவம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
தென்காசியில் ஜெகன்நாத் திருமண மண்டபம் அருகில் கடந்த 46 ஆண்டுகளாக பகவான் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி இயங்கி வருகிறது. இந்த சமிதியின் 46-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.
அதிகாலை 5 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம் மற்றும் நகர சங்கீர்த்தனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் சொற்பொழிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ரத உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சத்யசாயியின் அருள் பெற்ற குழந்தைகள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த சப்பர வீதி உலா ரயில்வே பீடர் ரோடு, எல்.ஆர்.எஸ்.பாளையம், கூலக்கடை பஜார் வழியாக சமிதியை அடைந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.