/* */

குற்றாலம் பேரூராட்சியில் மீண்டும் தேர்தல் ஒத்திவைப்பு

குற்றாலம் பேரூராட்சியில் திமுக உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் தேர்தல் ஒத்திவைப்பு.

HIGHLIGHTS

குற்றாலம் பேரூராட்சியில் மீண்டும் தேர்தல் ஒத்திவைப்பு
X

குற்றாலம் பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் தேர்தலில் அதிமுக உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலை தொடர்ந்து நியமன குழு உறுப்பினர் தேர்தலிலும் திமுக உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால் தேர்தல் ஒத்திவைப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி மொத்தம் 8 வார்டுகளை கொண்டது. இதில் 4 வார்டுகளை திமுக-வும் 4 வார்டுகளை அதிமுக என சமபலத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற திமுக, அதிமுக-இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

அதே சமயம் பேரூராட்சி தலைவர் தேர்தல் இரண்டு முறை நடைபெற்ற நிலையில் அதிமுக உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே பங்கேற்றனர். திமுக உறுப்பினர்கள் 4 பேர் பங்கேற்காததால் பெருபாண்மையோர் இல்லை என தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற நியமன குழு உறுப்பினர் தேர்தலிலும் அதிமுக கலந்து கொண்ட நிலையில் திமுக வழக்கம் போல புறக்கணித்ததால் இந்த தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டது. தலைவர் பதவியை கைப்பற்ற திமுக ஏதேனும் திட்டம் திட்டி வருகிறதா, தேர்தலை சந்திக்காமல் திமுக உறுப்பினர்கள் பின்வாங்க காரணம் என்ன என அப்பகுதி மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

Updated On: 30 April 2022 7:47 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  2. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  4. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  6. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  9. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?