/* */

தென்காசியில் போலீசார் அதிரடி சோதனை: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 179 பேர் கைது

தென்காசி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் அதிரடி சோதனை. சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 179 பேர் கைது.

HIGHLIGHTS

தென்காசியில் போலீசார் அதிரடி சோதனை: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 179 பேர் கைது
X

பைல் படம்.

மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் அதிரடி சோதனை. சட்டவிரோதமாக கஞ்சா, மது பாட்டில்கள், லாட்டரி மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 179 நபர்கள் கைது.

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின் பேரிலும் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள், கஞ்சா, லாட்டரி மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்கள் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில் விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 70 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 659 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 103 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 813 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1.200 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விற்பனைக்காக லாட்டரி சீட்டுகளை வைத்திருந்த 4 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

Updated On: 29 Dec 2021 1:11 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்