பாலம் கட்டும் பணியை தனிநபராக ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்
பாலம் ஓரிரு வாரங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எம்எல்ஏ பழனிநாடார் தெரிவித்தார்
HIGHLIGHTS
தென்காசியில் இருந்து இலஞ்சி செல்லும் சாலையில் அரிகராநதியும், சிற்றாறும் இணையும் இடமான ஆற்றின் குறுக்கே ரூ. 3 கோடி செலவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலம் கட்டுமான பணியை தனி நபராக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், மக்களின் நீண்ட கால கோரிக்கையான தென்காசி - இலஞ்சி பாலம் ஓரிரு வாரங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.
ஒரு வருடத்திற்கு மேலாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் தென்காசி - இலஞ்சி இடையே போக்கு வரத்து தடை செய்யப் பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள், பயணிகள் பெரும் 8கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலையில் மிகவும் சிரமம் பட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஒப்பந்தகாரர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்த அவர், இன்னும் ஓரிரு வாரங்களில் பணிகள் நிறைவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என உறுதி அளித்தார்.