/* */

சுரண்டை செண்பக கால்வாயில் தென்காசி எம்.எல்.ஏ. ஆய்வு

சுரண்டை செண்பக கால்வாயில் தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

சுரண்டை செண்பக கால்வாயில் தென்காசி எம்.எல்.ஏ. ஆய்வு
X

சுரண்டை செண்பக கால்வாயில் ஆய்வு மேற்கொண்ட, தென்காசி தொகுதி எம்.எல்.ஏ.  பழனி நாடார்.

தென்காசி, மாவட்டம் சுரண்டை பேரூராட்சி செண்பக கால்வாய் அருகில், பொட்டல் மாடசாமி கோவில் வடபுறம், பொது கழிப்பிடம் உள்ளது. இதை, 12, 13, 14, 16, 17 வார்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில், செப்டிக் டேங்க் உடைந்து கால்வாயில் கலந்து சென்று துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்பட்டு வந்தது. அத்துடன், செடி, புதர், மரங்கள் வளர்ந்து மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

இது சம்பந்தமாக தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடாரிஉடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியை நேரில் வந்து பார்வையிட்டு பேரூராட்சி இன்ஜினியர் மற்றும் அரசு அதிகாரிகளிடம், செப்டிங் டேங்க் சுத்தம் செய்து தர உத்தரவிட்டார். இதனால் சுகாதாரப் பணியாளர்கள் களத்தில் இறங்கி, செடி கொடி மரங்கள் முட்புதர்கள் ஆகியவற்றை அகற்றி துப்புரவு செய்தனர்.

எம்.எல்.ஏ. உடன், இன்ஜினியர் கோபி, கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயபால், தி.மு.க. கவுன்சிலர் அன்னபிரகாசம், காங்கிரஸ் பிரமுகர் சமுத்திரம், விவசாய சங்க செயலாளர் சமுத்திர பாண்டி, வக்கீல் சின்னததம்பி, தேவேந்திரன், டயர் கம்பெனி செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 16 Nov 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  3. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  4. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  5. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  6. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  8. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  9. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  10. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு