Begin typing your search above and press return to search.
பாவூர்சத்திரத்தில் வீதி வீதியாக வாக்கு சேகரித்த முன்னாள் எம்.பி.
முன்னாள் எம்பி ஏ.கே.எஸ் விஜயன், கவுன்சிலர் வேட்பாளர், வார்டு ஒன்றியக் கவுன்சிலர் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
HIGHLIGHTS
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் சாக்ரடீஸ், ஒன்பதாவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் வேட்பாளர் காவேரிக்கும், உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ கே எஸ் விஜயன், மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் பாவூர்சத்திரம் பஜார் மற்றும் தெருக்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சீனித்துறை, சுரண்டை நகரக் கழகச் செயலாளர் ஜெயபாலன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்