அனைவரும் இலவச தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக போட்டுக்கொண்டு கொரோனா தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் 18 வயது முதல் 59 வயது வரையுள்ளோருக்கான முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போடும் பணி 15.07.2022 முதல் தொடங்கப்பட்டு அரசு தடுப்பூசி மையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக போடப்பட்டு வருகிறது
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கால கொண்டாட்டத்தை முன்னிட்டு 75 நாட்கள் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான சிறப்பு திட்டம் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இன்றளவும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது என்பது அனைவரும் அறித்த உண்மை.
எனவே இரண்டாவது தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவுபெற்ற 18 வயது முதல் 59 வயது வரையிலானவர்கள் தங்களுக்கு அருகாமையில் இருக்கும் அரசு தடுப்பூசி மையங்களுக்கு சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக போட்டுக்கொண்டு, கொரோனா தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்து கொண்டு மாவட்டத்திற்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.