தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்
தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி பட்டியல் வெளியிட்டது குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைத்துக்கட்சி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் போது மூத்த குடிமக்களுக்கும்,ஊனமுற்றோருக்கும் தனி வசதி செய்துதரப்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்கு உரிய இட ஒதுக்கீடு அடிப்படை தொகுதி பட்டியல் எப்போது அறிவிக்கப்படும்?. வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கத்திற்கு கால அவகாசம் வழங்கப்படுமா?.
தொகுதி இட ஒதிக்கீடு பரிசீலனை செய்யும்போது அனைத்துக் கட்சியினரையும் கலந்தாலோசிக்க வேண்டும் அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் விடுபட்ட வாக்காளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் சார்பாக சாார்பாக மாவட்டச் செயலாளர்கள் , கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.