/* */

தென்காசியில் காங்கிரஸ் கட்சியின் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசியில் காங்கிரஸ் கட்சியின் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசியில் காங்கிரஸ் கட்சியின் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் கலந்தாய்வுக் கூட்டம்
X

தென்காசி மாவட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் மற்றும் நேர்காணல்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முரளிராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மேலிட பார்வையாளர் ஆஸ்கர் பிரடி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தென்காசி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் 15-க்கும் மேற்ப்பட்ட வார்டு பகுதியில் போட்டியிட கோரிக்கை வைக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், தென்காசி பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ், மாவட்ட மகளிரணி தலைவி சேர்மக்கனி உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Jan 2022 6:19 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்