Begin typing your search above and press return to search.
சிவகங்கையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
சிவகங்கையில் உள்ள சிங்காரம் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
HIGHLIGHTS
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கேரளா மாநில மாவோயிஸ்ட்களிடம், சிவகங்கை அண்ணாமலை நகரைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் சேர்ந்ததாக்க கூறப்படுகிறது. தற்போது அவர் கேரளா மாநில சிறையில் இருந்து வரும் நிலையில், சிவகங்கையில் உள்ள அவரது மூத்த சகோதரர் சிங்காரம் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர். காளிதாஸிற்கும், அவரது அண்ணன் சிங்காரத்திற்கும் தொடர்பு குறித்தும் அவர்களது குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள மாவோஸ்டின் உறவினர்கள் வீட்டில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.