நிலம் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்; சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்
ரூ.1 கோடி மதிப்பில்லான 120 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றியதில் பாரபட்சம் காட்டியதாக கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கருங்குளம் ஊராட்சி உள்ளது. இதில் கருங்குளம், உசிலங்குளம், தெற்குபட்டி, உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கண்மாய்க்கு செல்ல கூடிய வரத்து கால்வாய்களை இந்த கிராமத்தில் 120 ஏக்கர் நிலத்தை 11 பேர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இதனை மீட்கக் கோரி பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு ஆட்சியர் உத்தரவின் பேரில் அந்த இடங்களை நேற்று ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் வருவாய்துறையினர் அகற்றினர்.
இந்நிலையில், 30 ஆண்டு கால ஆக்கிரமிப்புகளை அகற்றியதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி இன்று காளையார் கோவில் -தொண்டி சாலையில் கல்லுவழி என்ற இடத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது காளையார்கோவில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் இருப்பதாகவும் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து முழுமையாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். காவல்துறையினர் வந்து சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதும் ஒரு மணி நேர மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.