/* */

மாவட்ட காவல் துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட காவல் துறையின் சார்பில் நடைபெற்றது.

HIGHLIGHTS

மாவட்ட காவல் துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
X

சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.மாவட்ட காவல் துறையின் சார்பில் நடைபெற்றது. தமிழகமெங்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில்,அதனை தடுக்க தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக

சிவகங்கை மாவட்ட காவல் துறையின் சார்பாக, சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினார்.

அதன் வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள், பேருந்துகளை நிறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் வினியோகித்தார். நிகழ்ச்சியின் முடிவில் பெண்கள்,குழந்தைகளுக்கான நடமாடும் ஆலோசனை வாகனத்தையும் தொடங்கி வைத்தார்.

Updated On: 15 July 2021 1:31 PM GMT

Related News