Begin typing your search above and press return to search.
பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்றகோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
வேலத்தில் பொதுமக்கள் செல்லும் சாலையை தனிநபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு.
HIGHLIGHTS
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப் பேட்டை அடுத்த வேலம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் பொதுமக்கள் நாள் தோறும் பயன்படுத்திவந்த பொது வழியை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், தற்போது கிராம் மக்கள் திருவிழா நடத்தும் சூழலில் உள்ளனர். அந்த வழியில் மின் விளக்குகளை அமைக்கவும் சாமி ஊர்வலம் நடக்க வழிவிடாமல் ஆக்கிரமிப்பாளர்கள் பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆகவே பொது வழியை மீட்டு ஆக்கிரமிப்பாளர்கள மீது நடவடிக்கை எடுத்து வழியை மீட்டுத்தர வேண்டும் என கிராம மக்கள் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.