/* */

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்க உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 7நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 நாட்கள்  டாஸ்மாக்  கடைகள் மூடல்
X

ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6ம் தேதி மற்றும் 9ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.

பின்னர் ,12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. எனவே, மாவட்டத்தில் வரும் 4ந்தேதி முதல் 9ந்தேதி வரை உள்ள ஆறு நாட்களுக்கும் பின்பு வாக்கு எண்ணும் நாளான 12ம் தேதி ஆகிய 7நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை இல்லாத தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ,இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் அறிவித்துள்ளதாவது:

இராணிப்பேட்டை மாவட்டத்தில்உள்ள அரசு மதுபானக்கடைகள் மற்றும் இந்தியதயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்கள் (சில்லரை விற்பனை) FL2முதல் FL-11வரை அனைத்து மதுபான கடைகளும் தெரிவிக்கப்பட்டுள்ள 7நாட்களுக்கும் அனைத்து மதுபானக்கடைகளும் முற்றிலுமாக இயங்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது .

தடைவிதித்துள்ள நாட்களில் உத்தரவைமீறி மதுபானக் கடைகளில் விற்பனை செய்வது தெரியவரும் பட்சத்தில் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல, மதுக்கூடங்களுக்கு இயங்க தடை உள்ளதால் அவை அறிவிக்கப்பட்ட நாட்களில் இயங்கஅனுமதி இல்லை மதுக்கூடங்களில் விர்பனைக்கு தடையுள்ள நிலையில் மது விற்பனைகள் மதுக்கூடங்களில் விற்பனை செய்யப்படுவது தெரியவருமானால் மதுக்கடை உரிமம் தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

மேலும், மதுக்கூட உரிமையாளர்மீது குற்றவியல் நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என்று இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் அறிவித்துள்ளார்.

Updated On: 1 Oct 2021 3:56 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்