/* */

இராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தொலைவிற்கு உள்வாங்கிய கடல் நீர்

இராமேஸ்வரத்தில், 50 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் உள்வாங்கியது; இதனால், படகுகள் தரை தட்டி நிற்கின்றன.

HIGHLIGHTS

இராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தொலைவிற்கு உள்வாங்கிய கடல் நீர்
X

இராமேஸ்வரத்தில்,  50 மீட்டர் தொலைவிற்கு உள்வாங்கிய கடல் நீரால், தரை தட்டி நிற்கும் படகுகள்.

இராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதையடுத்து, இராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், வழக்கத்தைவிட மன்னார்வளைகுடா, லட்சத்தீவு கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லாமல் தங்களுடைய படகுகளை நங்கூரமிட்டு கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். இந்தநிலையில் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் திடீரென 50 மீட்டர் தொலைவில் கடல் உள்வாங்கியது. இதனால் மீனவர்கள் அச்சமடைந்தனர். மீனவர்கள் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்த நாட்டுப்படகுகள் அனைத்தும் தரை தட்டி நிற்கின்றது. இதனால், அவர்கள் கவலையடைந்துள்ளனர்.
Updated On: 17 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!