/* */

இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல். ஒருவரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை.

HIGHLIGHTS

இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
X

இலங்கைக்கு கடத்த இருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல். ஒருவரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை.

இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் இருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக மண்டபம் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து இன்று மாலை தனுஷ்கோடி அருகே உள்ள சேராங்கோட்டை கடற்கரைப்பகுதியில் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடலில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்றை சோதனை செய்தனர். படகில் சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நாட்டுப்படகையும், அதில் இருந்த சுமார் 500 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், படகை ஓட்டி வந்த இராமேஸ்வரம் இந்திரா நகரைச் சேர்ந்த லிங்கநாதன் என்பவரை கைது செய்து மண்டபம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 12 July 2021 2:36 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்