தண்டோரா போட்டு மநீம வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் தண்டோரா பாேட்டு திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார்.
சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மூர்த்தி புரோட்டா சுடுவது , சவரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்து வாக்காளர்களை கவர்ந்து நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வந்தார்.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட அசோக்நகர், பொன்நகர், கேஎல்கேஎஸ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் மூர்த்தி, தண்டோரா அடித்து தன்னை எம்எல்ஏ.,வாக தேர்ந்தெடுத்தால் புதுக்கோட்டை தொகுதிக்கு என்னென்ன திட்டங்களை எல்லாம் செயல்படுத்துவேன் என்று பட்டியலிட்டு வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து நூதன முறையில் டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வாக்காளர்களை கவர்ந்தார்.