/* */

உரிமம் பெறாமல் எலிபேஸ்ட் போன்ற பூச்சிமருத்தை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் எலிபேஸ்ட் போன்ற பூச்சி மருத்துகளை விற்றால் கடும் நடவடிக்கை என ஆட்சியர் அறிவிப்பு

HIGHLIGHTS

உரிமம் பெறாமல் எலிபேஸ்ட் போன்ற பூச்சிமருத்தை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் எலி விஷம் போன்ற பூச்சிக்கொல்லிகள் விற்பனை செய்யும் விற்பனை யாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துக் கடைகளிலும் எலி பேஸ்ட், கரப்பான் கொல்லிகள், கொசு விரட்டி போன்ற வீட்டுப் பயன்பாட்டுப் பூச்சிக் கொல்லிகளை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் பூச்சிக்கொல்லி விற்பனை உரிமம் அவசியம் எனவும், உரிமம் இல்லாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகள், பேரங்காடிகள் போன்றவற்றில் எலி பேஸ்ட், கரப்பான் கொல்லிகள், கொசுவிரட்டிகள் போன்ற வீட்டில் பயன்படுத்தும் பூச்சிகொல்லிகள் விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-இன் படி குற்றமாகும்.

வீடுகளில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளைக் கடைகளில் விற்கவும் உரிமம் பெறுவது அவசியமாகும். இதற்குத் தேவையான உரிமத்தினைப் பெறத் தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நகர்ப்புறத்தில் ஒரு பூச்சிக்கொல்லிக்கு ரூ.500- என்ற வீதத்தில் அதிகபட்சம் ரூ.7500- செலுத்தியும், ஊரகப் பகுதியில் ஒரு பூச்சிக்கொல்லிக்கு ரூ.100- என்ற வீதத்தில் அதிகபட்சம் ரூ.1500- செலுத்தியும் உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.

உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-இன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . எனவே, அனைத்துப் பெட்டிக்கடை, மளிகைக்கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் (Super Market) விற்பனையாளர்கள் உடன் தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் எனவும், பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-இன்படி உரிய பதிவேடுகளையும் ஆவணங்களையும் பராமரிப்பதோடு விற்பனை செய்வதற்கு உரிய பட்டியலையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், விற்பனை நிலையங்களில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளை உணவுப் பொருட்கள் அருகில் வைத்து விற்பனை செய்யாமல் தனியாக இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும் எனவும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மேற்கண்ட வீட்டுப் பயன்பாட்டுப் பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யக் கூடாது.

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு வேளாண் உதவி இயக்குநர், புதுக்கோட்டை 6381741240, கந்தர்வகோட்டை 9787967472, திருவரங்குளம் 9159983601, கறம்பக்குடி 9787012704, அறந்தாங்கி 9080709899, ஆவுடையார்கோவில் 9442325600, மணமேல்குடி 9159983601, திருமயம்; 978752914, அரிமளம் 9965668408, பொன்னமராவதி 6379701311, அன்னவாசல் 9442516485, விராலிமலை 9443006322, குன்றாண்டார்கோவில் 8248198738 ஆகிய எண்களில் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 10 May 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  3. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  4. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  6. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  7. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  8. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  9. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...