தேங்கி நின்ற மழை நீர் வெளியேற்றம்: ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு
கொட்டும் மழையில் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு.
HIGHLIGHTS
கொட்டும் மழையில் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகளில் நிரம்பியும் பல்வேறு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தும் வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை அருகே உள்ள 9A நத்தம்பண்ணை ஊராட்சியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக 9A நத்தம்பண்ணை ஊராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. இதனையடுத்து இன்று தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழையை பொருட்படுத்தாமல் ஊராட்சி மன்ற தலைவர் பாபு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மழை நீர் வெளியேறும் வரத்து வரிகளை தூர் வாரியம் மற்றும் கருவேல மரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.
மழைநீரால் பொதுமக்கள் பாதிப்படைய கூடாது என்பதற்காக மழையை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த பாராட்டு தெரிவித்தனர்.