/* */

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக்கம்

புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக்கம்
X

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது

புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகர பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி நகர் பகுதியில் குடிதண்ணீர் சீராக வழங்கிடு, பட்டா இல்லாத மக்களுக்கு பட்டா வழங்கிடு, காந்தி நகர் திருக்கட்டளை பகுதி மக்களின் சுகாதாரத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ள குப்பை கிடங்கை இடம் மாற்றம் செய்ய வேண்டும், காந்திநகர், திருக்கட்டளை செல்லும் தார் சாலையை உடனடியாக செப்பனிடு, நகராட்சி குப்பை கிடங்கை நகர்ப்புறத்தில் கிழக்கு மேற்கு என இரண்டு பகுதியாக தேர்வு செய்து மறுசுழற்சி செய்திட, பகுதி முழுவதும் தோரண வாய்க்காலை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

காந்தி நகர், லெட்சுமி குமரப்பா நகர் வழியாக போஸ்நகர் செல்லும் சாலையை புதிதாக அமைத்திடு, காந்திநகர், உசிலங்குளம் மக்கள் பயண்படுத்திடும்.உசிலங்குளம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து நகர பேருந்துகளையும் நின்று சென்றிட வழிவகை செய்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதில் கனேசன்,ஜெகன், தலைமை வகித்தார்கள், தோழர் சோலையப்பன், நகர செயலாளர் துவக்கி வைத்தார், நாகராஜன்மாவட்ட செயற்குழு உறுப்பினர் முன்னிலை வகித்தார். பாண்டியன் நகர குழு உறுப்பினர் பங்கேற்றார். மற்றும் காந்தி நகர் கிளை தோழர்கள் கனேசன், குணசேகரன், ஓவியர் தனபால், சுசீந்திரன், வினோத், ராஜ்கமல், பவுசிக் ராஜா, அறிவழகன், அரவிந்த், மணி, ரகேஷ், கார்த்தி, மனோஜ், விமல், கௌதம், சுபாஷ், மதன்குமார், காவியன்,மற்றும் சமூக ஆர்வலர்கள் வடிவேலு, சரவணன், கலியமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Updated On: 22 Nov 2021 1:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  9. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  10. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...