/* */

ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

Caste Census - ஆக. 7 -ஆம் தேதி மதுரையில் நடந்த சமூக நீதி மாநாட்டு தீர்மானத்தின்படி கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

HIGHLIGHTS

ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த  வலியுறுத்தி  கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
X

Caste Census -ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி கறம்பக்குடி ஒன்றியம், மாங்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆகஸ்ட் 7 -ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் கூட்டமைப்பு சார்பில் சமூகநீதி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு தலைவர் மேனாள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மேனாள் தேர்வாணைய குழு உறுப்பினர் சமூக நீதிப் போராளி இரத்தினசபாபதி ஆணைக் கிணங்க, தமிழ்நாடு முத்தரையர் சங்கம் நமது மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராஜமாணிக்கத்தின் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதுவரை இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு திருத்தமும் செய்யக் கூடாது என ஊராட்சி பொதுமக்கள் சார்பில் தீர்மானம் கொண்டுவரப் பட்டது.

அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி ஒன்றியம் மாங்கோட்டை ஊராட்சியிலும், எம் தெற்கு தெரு ஊராட்சியிலும், தீத்தாணிப்பட்டி ஊராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பொதுமக்களின் கையெழுத்திட்ட தீர்மான மனுவினை, ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரிடத்திலும் ஊராட்சி பொதுமக்களும் பிற்படுத்தப்பட்டோர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நமது மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சரவணதேவா, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆலங்குடி பாலையன், தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில மாணவரணி செயலாளர் ஜெயக்குமார், நமது மக்கள் கட்சி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் இராம சுரேஷ் வர்மன், நமது மக்கள் கட்சி மாநில மகளிர் அணி செயலாளர் மாலா ஆறுமுகம் ஆகியோர் மனுவினை கொடுத்தனர்.

திருவரங்குளம் ஒன்றியம், கொத்தகோட்டை ஊராட்சியிலும், மாங்கனாம்பட்டி ஊராட்சியிலும், பாச்சிக்கோட்டை ஊராட்சியிலும் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியில் ஏவூர் ஊராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 Aug 2022 11:49 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  4. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  5. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  7. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  10. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?