புதுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்
புதுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்டு முகாமில் இருப்பவர்களுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது குறிப்பாக வடகிழக்கு பருவமழை தொடங்கியது தொடர்ந்து கடந்த 10 தினங்களாக கனமழை பெய்ததால் மாவட்டத்தில் உள்ள 90 சதவீத நீர் நிலைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது
இந்நிலையில் .கடந்த சில தினங்களாக ஓய்ந்திருந்த மழையானது நேற்று மாலை திடீரென்று மீண்டும் செய்ய தொடங்கியது. இந்த மழையானது மாலை முதல் நள்ளிரவு வரை நீடித்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கனமழையால் பல பகுதிகளில் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு உபரி நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது. குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
மேட்டுப்பட்டி பகுதியிலுள்ள புலி கொண்டு குளம் உடைந்து அன்னை நகர் இந்திரா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அந்த பகுதியில் உள்ள 200 பேரை அங்கிருந்து பாதுகாப்பான பகுதிக்கு மீட்டுச் சென்றனர். தற்போது அவர்கள் மேட்டுப்பட்டி அருகே உள்ள கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
இன்று காலை அவர்களை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் செந்தில், நகர செயலாளர் நைனா முகமது உள்பட பலர் உடன் இருந்தனர்.