/* */

புதுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

புதுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்டு முகாமில் இருப்பவர்களுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  எம்.எல்.ஏ. ஆறுதல்
X

புதுக்கோட்டையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ. முத்துராஜா ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது குறிப்பாக வடகிழக்கு பருவமழை தொடங்கியது தொடர்ந்து கடந்த 10 தினங்களாக கனமழை பெய்ததால் மாவட்டத்தில் உள்ள 90 சதவீத நீர் நிலைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது

இந்நிலையில் .கடந்த சில தினங்களாக ஓய்ந்திருந்த மழையானது நேற்று மாலை திடீரென்று மீண்டும் செய்ய தொடங்கியது. இந்த மழையானது மாலை முதல் நள்ளிரவு வரை நீடித்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கனமழையால் பல பகுதிகளில் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு உபரி நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது. குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

மேட்டுப்பட்டி பகுதியிலுள்ள புலி கொண்டு குளம் உடைந்து அன்னை நகர் இந்திரா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அந்த பகுதியில் உள்ள 200 பேரை அங்கிருந்து பாதுகாப்பான பகுதிக்கு மீட்டுச் சென்றனர். தற்போது அவர்கள் மேட்டுப்பட்டி அருகே உள்ள கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

இன்று காலை அவர்களை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் செந்தில், நகர செயலாளர் நைனா முகமது உள்பட பலர் உடன் இருந்தனர்.

Updated On: 16 Nov 2021 7:53 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!
  4. வீடியோ
    திருப்புமுனையாகும் ஒரே ஒருவரின் ஆதரவு ! Relax செய்யும் BJP ! || #Modi...
  5. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  10. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...