/* */

மக்களைத் தேடி மருத்துவ திட்டம்: புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா தொடக்கிவைப்பு

முகாமுக்கு வந்த பொதுமக்களுக்கு புதுக்கோட்டை எம்எல்ஏ-மருத்துவர் முத்துராஜா பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினார்

HIGHLIGHTS

மக்களைத் தேடி மருத்துவ திட்டம்: புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா தொடக்கிவைப்பு
X

புதுக்கோட்டை அருகே கருப்பு டையான்பட்டியில் நடைபெற்ற மக்களை தேடி மருத்துவம்   திட்டத்தில் கலந்துகொண்ட  புதுக்கோட்டை சட்டமன்ற  உறுப்பினர் மருத்துவ முத்துராஜா  முகாமில் கலந்து கொண்ட  முதியவரை பரிசோதனை செய்து  அவருக்கு அறிவுரைகள்  வழங்கினார்.

புதுக்கோட்டை தொகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா தொடங்கி வைத்தார்

கொரோனாவைரஸ் தொற்று காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்தது. அதேபோல், தொடர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்வதையும் பொதுமக்களிடம் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி, தற்போது தமிழகம் முழுவதும் அதிக தடுப்பு ஊசி முகாம்களை நடத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பொதுமக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது.அதேபோல், முதியவர்கள் பல்வேறு நோய்களால் வீடுகளில் அவதிப்படும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் சென்றமாதம் தமிழக அரசு மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்து துவக்கி வைத்தார்.

அந்தத்திட்டம் தற்போது தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.சர்க்கரைநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற முடியாமல் வீடுகளுக்குள் இருக்கும் நோயாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதத்தில், தற்போது மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், மருத்துவர்கள் வீடுகள் சென்று சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்ததிட்டத்தால் பொதுமக்கள் அதிக அளவில் பயன் பெற்று வருகின்றனர்.தமிழக முழுவதும் இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.



அதன்ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மக்களை தேடி மருத்துவம் என்ற இத்திட்டத்தின் மூலம் மருத்துவர்கள் நேரடியாக பல்வேறு கிராமங்களுக்குச் சென்று மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்குள் நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களை நேரடியாக ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட கருப்புடையன்பட்டி ஊராட்சியில் பொதுமக்கள் பயன்படும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தினை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை. முத்துராஜா துவக்கி வைத்தார்.மருத்துவ முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Sep 2021 11:31 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  2. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  4. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  6. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  7. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  8. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  10. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்