/* */

விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை

2022 செப்டம்பர் மாதம் கிடைக்க வேண்டிய இயல்பான மழை 410.30 மி.மீ. க்கு பதிலாக 563.53 மி.மீ. அளவு மழை கிடைத்துள்ளது

HIGHLIGHTS

விவசாயிகளுக்குத் தேவையான  உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை
X

புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற  விவசாயிகள் குறை கேட்பு நாள் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர்கவிதா ராமு தலைமையில் (30.09.2022) நடைபெற்றது.

இதில்; மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 783.30 மி.மீ. ஆகும். 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவான 410.30 மி.மீ. க்கு பதிலாக 563.53 மி.மீ. அளவு மழை பெறப்பட்டுள்ளது. 153.23 மி.மீ கூடுதலாக பதிவாகியுள்ளது.

பயிர் சாகுபடியை பொருத்தவரை 2022-2023 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் முடிய நெல் 10202 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 1112 எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 756 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 5383 எக்டர் பரப்பிலும், கரும்பு 1884 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 43 எக்டர் பரப்பளவிலும் மற்றும் தென்னை 12299 எக்டர் பரப்பளவிலும் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

பயிர்ச் சேதத்தை பொருத்தவரை டிசம்பர் 30 முதல் ஜனவரி 02 வரை பெய்த கனமழையால் பாதிப்படைந்த 1339.705 எக்டர் நெல், உளுந்து மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கும், நிவாரணத் தொகை ரூ.530.22 இலட்சம் அரசிடமிருந்து வரப்பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இடுபொருட்கள் இருப்பை பொருத்தவரை புதுகோட்டை மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 169.262 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 46.433 மெ.டன் பயறு விதைகளும், 31.476 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 6.532 மெ.டன் சிறுதானிய விதைகளும், 0.300 மெ.டன் எள் விதைகளும், 0.537 மெ.டன் பசுந்தாள் உரவிதைகளும் இருப்பில் உள்ளன.

விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் நெல் சாகுபடியில் சன்ன ரகங்களை அதிக அளவில் சாகுபடி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சம்பா பருவத்திற்கும் உகந்த ரகங்களான ஆடுதுறை 39, என்எல்ஆர் 34449, ஆர்என்ஆர் 15048, கோ 50, கோ 53, டிகேஎம் 13 ஆகியவற்றை தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்ள திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செப்டம்பர்-2022 மாதத்திற்குத் தேவையான யூரியா விநியோகத் திட்ட இலக்கின்படி 3620 மெ.டன்களுக்கு, இதுவரை 1146 மெ.டன் யூரியா பெறப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குத் தேவையான டி.ஏ.பி. உரம் விநியோகத் திட்ட இலக்கின்படி 900 மெ.டன்களுக்கு 357 மெ.டன் வரப்பெற்றுள்ளது. காம்ப்ளக்;ஸ் உரங்களைப் பொறுத்தவரை விநியோகத் திட்ட இலக்கான 1310 மெ.டன்களுக்கு இதுவரை 443 மெ.டன் பெறப்பட்டுள்ளது. பொட்டாஷ் உரங்களைப் பொறுத்தவரை விநியோகத் திட்ட இலக்கான 350 மெ.டன்களுக்கு இதுவரை 215 மெ.டன் பெறப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 2565 மெ.டன்னும், டிஏபி 850 மெ.டன்னும், பொட்டாஷ் 626 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 4272 மெ.டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கத்தில் 416 மெ.டன் யூரியா, 534 மெ.டன் டிஏபி, 293 மெ.டன் பொட்டாஷ், 1190 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப் பட்டுள்ளது. 1102 ஏக்கர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதால் 1374 விவசாயிகள் பயன்பெறுகிறார்கள்.

2021-22ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 68 தரிசு நிலத் தொகுப்புகளைப் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டு 32 தரிசு நில தொகுப்புகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டிற்குப் புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றில் 68 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கிராமப் பஞ்சாயத்துகளில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. தரிசு நில தொகுப்புகளை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.

பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி கூடுதல் பரப்பில் சாகுபடி செய்திடும் பொருட்டு வேளாண் பயிர்களான கரும்பு, மக்காச்சோளம், எண்ணெய்ப் பனை மற்றும் தென்னை மரங்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனமும், பயறுவகைப் பயிர்கள் மற்றும் நிலக்கடலைப் பயிர்களுக்குத் தெளிப்புநீர்ப் பாசனம் மற்றும் மழைத்தூவான் பாசனக் கருவிகளும் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிக ளுக்கு 75 சதவீத மானியத்திலும் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.

2022-23ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1100 எக்டர் இலக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 1051 பயனாளிகளுக்கு 1063 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை ரூ.2 கோடியே 56 இலட்சம்; நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள் ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவசாயிகளின் நலனிற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நாளை 01.10.2022 முதல் 55 நேரடி நெல்கொள்முதல் நிலைங்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன. எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு , பருவ மழைக்காலங்களில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், அசோலா வளர்ப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் நேரடி நெல் விதைப்பு சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த மடிப்பேடுகளை வெளியிட்டார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வேளாண் இணை இயக்குநர் (பொ) சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராஜேந்திர பிரசாத், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

------------------------------------------------------------------------------------------------------------------------------

Updated On: 30 Sep 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...