/* */

அரசு விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

HIGHLIGHTS

அரசு விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
X

தமிழகத்தில் ஒன்றரை ஆண்டு காலமாக திறக்கப்படாத பள்ளிகள் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருந்தது இதனை கட்டாயமாக பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் மாணவ மாணவிகள் எவ்வாறு அமர வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அதில் இடம்பெற்றிருந்தன.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை ஆலங்குடி அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 5 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப் படுகிறதா என்பது குறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். இன்று அவர் கீரனூர் ஆலங்குடி உள்ளிட்ட பகுதியில் உள்ள 8 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் புதுக்கோட்டையில் ஒரு தனியார் பள்ளி ஒரு அரசு உதவிபெறும் பள்ளி என 10 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் ஆய்வில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டு வழிகாட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 8 Sep 2021 2:35 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வங்க கடலில் புதிதாக உருவாகியது ரீமல் புயல்
  2. க்ரைம்
    காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் சிபிசிஐடி விசாரணை துவக்கம்
  3. லைஃப்ஸ்டைல்
    அமுதமான தமிழ் மொழியில் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 30 பேர் கைது
  5. விளையாட்டு
    ஐபிஎல் கிரிக்கெட்: ஆர்சிபி வெளியேறியதை கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள்
  6. ஈரோடு
    பவானி எலவமலையில் புகையிலை, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்
  7. லைஃப்ஸ்டைல்
    புது வீடு கட்டிப்பார்ப்போம்..! புன்னகையை சேர்ப்போம்..!
  8. நாமக்கல்
    மாற்றுத்திறனாளிக்காக கட்டப்படும் வீட்டை ஆய்வு செய்த ஈரோடு ஆட்சியர்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் எழுத, படிக்க தெரியாதவர்கள் பற்றி தெரிவிக்க...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் நேரு