/* */

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் சிபிசிஐடி விசாரணை துவக்கம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணையை துவக்கி உள்ளனர்.

HIGHLIGHTS

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் சிபிசிஐடி விசாரணை துவக்கம்
X

ஜெயக்குமார்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கே பி கே ஜெயக்குமார். இவர் கடந்த இரண்டாம் தேதி திடீர் என காணாமல் போனார். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். இந்த நிலையில் நான்காம் தேதி அவர் தனது வீட்டின் அருகில் உள்ள அவரது தோட்டத்திலேயே உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன. உடல் முழுவதும் கம்பிகளால் சுற்றி கட்டப்பட்டிருந்தது.

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த ஜெயக்குமார் மர்ம மரணம். இது தொடர்பாக திசையன்விளை போலீசார் முதலில் விசாரணையை தொடங்கினர் அப்போது ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் இரண்டு கடிதங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஜெயக்குமார் கையினால் எழுதப்பட்ட அந்த கடிதங்கள் எஸ்பி இடம் சேர்க்கப்படவில்லை. அவரது வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த கடிதத்தில் சட்டமன்ற உறுப்பினர் உள்பட முக்கிய பிரமுகர்கள் சிலரது பெயர்கள் இடம் பெற்று இருந்தன. இது தொடர்பாக போலீசார் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி தங்கபாலு ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினர். ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா தற்கொலை செய்து கொண்டாரா என்பதில் இதுவரை துப்பு துவங்கவில்லை.

இந்த கொலையில் துப்பு துலக்குவதற்காக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு உள்ளனர் ஆனாலும் இதுவரை துப்பு துவங்கவில்லை. இந்த நிலையில் தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால், ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை விசாரித்து துப்பு துலக்குவதற்காக இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் உடனடியாக தங்களது விசாரணையை தொடங்கினர். முதல் கட்டமாக சிபிசிஐடி கூடுதல் போலீஸ் சூப்பிரெண்ட் சங்கர் தலைமையில் டிஎஸ்பி உலகராணி மற்றும் அதிகாரிகள் இன்று ஜெயக்குமார் சடலமாக கிடந்த சடலமாக கிடந்த தோட்டத்தின் அருகில் விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக முதல் கட்ட விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 23 May 2024 11:50 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    வார ராசிபலன் 16 முதல் ஜூன் 2024 வரை அனைத்து ராசியினருக்கும்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் போதை பொருட்களுடன் ரஷ்ய பெண் கைது
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    ரத்தக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் ரத்த தான முகாம்
  6. போளூர்
    தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
  7. நாமக்கல்
    சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவங்க அரசு போக்குவரத்துக் கழக...
  8. லைஃப்ஸ்டைல்
    தினமும் இரவில் வெற்றிலையை மென்று சாப்பிடுங்க... இதுல ஏகப்பட்ட விஷயம்...
  9. லைஃப்ஸ்டைல்
    பாகற்காய் கசப்புதான்; அதுதரும் பலன்களோ பலமடங்கு இனிப்பானது - அந்த...
  10. லைஃப்ஸ்டைல்
    குழந்தை வளர்ச்சிக்கு உதவும் அவல் கொழுக்கட்டை செய்வது எப்படி?