/* */

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல், கேஸ், விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் காந்தி சிலை முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த சைக்கிள் பேரணியானது காந்தி சிலையில் இருந்து துவங்கி கீழ ராஜவீதி, மேல ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மீண்டும் புதிய பேருந்து நிலையத்திற்கு பேரணி வந்தடைந்தது. இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 13 July 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க