/* */

பணி நியமன ஆணை: தமிழக முதல்வருக்கு வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் சான்றிதழ்கள் சரிபார்த்தும் இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

HIGHLIGHTS

பணி நியமன ஆணை:   தமிழக முதல்வருக்கு  வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மாவட்ட வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள்

வேலையில்லா இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலையில்லா இடைநிலை ஆசிரியர் நலச் சங்கத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. ஆனால். 10 ஆண்டுகள் கடந்தபிறகும்கூட, இதுவரை பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்து தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், எங்களைப் போல் உள்ள வேலை இல்லா இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாவட்ட பணிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளித்து பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டுமென்று, வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள் நலச்சங்கம் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சகாயராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2010-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில், வேலையில்லா இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. பின்னர், ஆசிரியர் தகுதித் தேர்வான ஸ்லட் தேர்வு வந்ததால், எங்களைப் போல உள்ளவர்கள், அந்தத் தேர்வுகளில் சரியான முறையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஏனென்றால், நாங்கள் ஆசிரியர் படிப்பு முடித்து 17 ஆண்டு காலம் ஆகிவிட்ட சூழ்நிலையில், திடீரென ஆசிரியர் தகுதி வைப்பதால் எங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் அந்தத் தேர்வுகளை சுலபமாக கையாண்டு தேர்ச்சி பெற்று பணிக்கு சென்று விட்டனர்.

எனவே, தற்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக ஒரு பெற்றுள்ள இந்த ஆட்சிக் காலத்திலாவது கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வேலை இல்லாமல் குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்பட்டு வரும் எங்களைப் போல இருக்கும் வேலை இல்லா இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாவட்ட பணிமூப்பு அடிப்படையில், சிறப்பு கவனம் செலுத்தி முன்னுரிமை அளித்து பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.


Updated On: 24 Aug 2021 9:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு