Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவர் கைது
பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை போலீசார் பணத்துடன் கைது செய்தனர்.
HIGHLIGHTS
பெரம்பலூரில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக திருச்சி தனிப்படை போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது.அதனைத்தொடர்ந்து அவர்கள் நடத்தியசோதனையில் பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் இரண்டு பேர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. லாட்டரி சீட்டு விற்பனை செய்த புதிய மதன கோபாலபுரம் முத்துசாமி, துறைமங்கலம் செல்லதுரை ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 44,610 ரூபாய் ரொக்கம்,இரண்டு இருசக்கரவாகனம்,மூன்று செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.