பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு பாேலீசார் விழிப்புணர்வு
குழந்தைகளின் பாதுகாப்பு இலவச தொலைப்பேசி எண் 1098, பெண்களின் பாதுகாப்பு மற்றும் பிரச்சனைகளுக்கு 181 இலவச தொலைப்பேசி எண்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம், எசனை அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரம்பலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சுப்ரமணியன் மற்றும் அவரது குழுவினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குழந்தைகளுக்கு Good touch & Bad touch என்றால் என்ன என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தும், குழந்தைகள் எதிர்காலத்தில் எவ்வாறு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும்,
எதிர்பாராத பிரச்சனைகளை எவ்வாறு கையால்வது என்பது குறித்தும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் அதற்கான இலவச தொலைப் பேசி எண் 1098 என்பது குறித்தும், பெண்களின் பாதுகாப்பிற்கும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தகவல் தெரிவிக்க 181 என்ற இலவச தொலைப்பேசி எண்ணை குறித்தும், குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்கவும் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தவும் உங்களால் மட்டுமே முடியும் என குழந்தைகளிடம் மிகச் சிறப்பாகவும், எளிமையாகவும் கலந்துரையாடல் நடத்தினார்.
மேலும் காவல் ஆய்வாளர் சி.சுப்ரமணியன் அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளிடம் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் என்றால் தயக்கம் சிறிதும் இன்றி பள்ளி வளாகத்தில் தற்போது நான் வைக்கும் புகார் பெட்டியில் தங்களது புகார்களை கடிதங்களாக தெரிவிக்கலாம் எனவும் இரகசியம் காக்கப்படும் எனவும் கூறி புகார் பெட்டி ஒன்றை வைத்தார்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவினர் பெண்கள் பாதுகாப்பு அலகு பிரிவினர் மற்றும் சமூக நல அலுவலர் பள்ளி தலைமை ஆசிரியர் எசனை கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.