Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் இன்று 745 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!
பெரம்பலூர் இன்று மட்டும் 745 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
கொரோனாவின் 2து அலை பரவல் தமிழகத்தில் சற்று வேகம் எடுத்தது. இதற்கு ஒரே தீர்வு தடுப்பூசி என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி கொரோனா தடுப்பூசி போடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பெம்பலூர் மாவட்டத்தில் இன்று அரசு தலைமை மருத்துவமனையில் 135 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 610 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள். பெரம்பலூரில் இன்று மொத்தமாக 745 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 1,44,186 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.