/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் மழை வேண்டி மக்கள் கரகம் தூக்கி சிறப்பு வழிபாடு

ஆடி பெருக்கு தினத்தை முன்னிட்டு மழை பொழிய வேண்டி ஆண்டுதோறும் கரகம் தூக்கி சிறப்பு வழிபாடு செய்த கிராம மக்கள்

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் மழை வேண்டி மக்கள்  கரகம் தூக்கி சிறப்பு வழிபாடு
X

பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் தாலுகா,நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடி பெருக்கு தினத்தை முன்னிட்டு மழை பொழிய வேண்டி ஆண்டுதோறும் கரகம் தூக்கி சிறப்பு வழிபாடு .

பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் தாலுகா,நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடி பெருக்கு தினத்தை முன்னிட்டு மழை பொழிய வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா,நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடி பெருக்கு தினத்தை முன்னிட்டு மழை பொழிய வேண்டிஆண்டுதோறும் கரகம் தூக்கி சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கரகம் தூக்குதல் நிகழ்ச்சி, நாட்டார்மங்கலம் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டு, ஊர்வலமாக கரகத்தை தலையில் சுமந்த படியே செட்டிகுளம் வடபழனி என்றழைக்கப்படும், தண்டாயுதபாணி கோயிலின் மலை அடிவாரத்தில் உள்ள பஞ்சநதி தெப்பக் குளத்திற்கு வந்தனர்.

பின்னர், பக்தர்கள் குளத்தில் புனித நீராடி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் கரகத்தை தலையில் சுமந்தவாறு, நாட்டார்மங்கலம் கிராமத்தில் முக்கிய வீதி வழியாக சென்று செல்லியம்மன் கோவிலுக்கு வந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Updated On: 3 Aug 2021 5:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’