பெரம்பலூரில் தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வாயில் கருப்பு துணியைக் கட்டிக் கொண்டு தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம். நடத்தினர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் அருகே உள்ள மலையாளப்பட்டி கிராமத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த பெரியசாமி என்பவர் கடந்த ஜன. 9 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெரியசாமியின் மனைவி மல்லிகா மற்றும் மகள்கள் இவரின் உடலை நல்லடக்கம் செய்ய உதவிகள் கேட்டும், வாரிசு சான்றிதழ், பணிப்பதிவேடு வழங்க கோரியும் மலையாளப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அங்கு முறையாக சான்றிதழ்கள் வழங்கப்படாததால் பெரம்பலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், வேப்பந்தட்டை வட்டாச்சியர் அலுவலகத்திலும் பல்வேறு கட்டமாக மனு அளித்துள்ளனர்.
ஆனால் இறந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு அரசின் எந்த ஒரு உதவிகளும் சென்றடையாததால் இந்த சம்பவத்தை கண்டித்து பெரம்பலூர் தொழிலாளர் கட்சியினர் மற்றும் மலையாளப்பட்டி தூய்மை பணியாளர்கள், இறந்தவரின் உறவினர்களும் இணைந்து இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வாயில் கருப்பு துணியைக் கட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மனு அளிக்க வந்தவர்களை அலைக்கழித்து முறையாக நடவடிக்கை எடுக்க தவறிய அதிகாரிகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பியதோடு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் முறையாக வழங்கிட கோரியும் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.