/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.வினர் விருப்ப மனு

பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.வினர் விருப்ப மனு வழங்கினார்கள்.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட  தி.மு.க.வினர் விருப்ப மனு
X

பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற   உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.சார்பில் போடடியிட விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. விருப்ப மனு பெற்றவர்கள் மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட கழக செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்னம் சி.இராஜேந்திரனிடம், பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர்,அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் கழகத்தின் சார்பில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ஏராளமானோர் விருப்ப மனு வழங்கினார்கள்.

இதில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரும், பெரம்பலூர் நகர செயலாளருமான எம். பிரபாகரன், மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், பொருளாளர் செ.இரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.அண்ணாதுரை, எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், பேரூர் கழக செயலாளர்கள் எம்வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன், சேகர், நகர இளைஞரணி அமைப்பாளர் அ.அப்துல்கரீம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Dec 2021 4:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  7. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  8. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  9. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  10. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்