/* */

சென்னையில் 7ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு: நாமக்கல்லில் நேரடி ஒளிபரப்பு

சென்னையில் வருகிற 7ம் தேதி நடைபெறும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு துவக்க விழா நிகழ்ச்சி, நாமக்கல்லில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

சென்னையில் 7ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு: நாமக்கல்லில் நேரடி ஒளிபரப்பு
X

பைல் படம்

சென்னையில் வருகிற 7ம் தேதி நடைபெறும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு துவக்க விழா நிகழ்ச்சி, நாமக்கல்லில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டை தொழில் மிகை முன்னோடி மாநிலமாக மாற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் வருகிற, 7 மற்றும் 8 தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 (ஜிஐஎம்) நடைபெறுகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த மாநட்டிற்கு தலைமை வகித்து துவக்கி வைக்கிறார். இந்நிகழ்வில் தொழில்துறையின் அனைத்து தரப்பினர் மற்றும் மாணவர்களை பங்கு பெற செய்வது அரசின் நோக்கமாகும். இந்த உலக முதவீட்டாளர்கள் மாநாட்டின் துவக்க விழா, சென்னையில் 7ம் தேதி காலை 9.30 மணி முதல் 11.45 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட தொழில்துறை கூட்டமைப்புகள், தொழில்துறை தலைவர்கள், எம்எஸ்எம்இ, சிட்கோ மற்றும் நாமக்கல் மாவட்ட தொழில் முனைவோர்கள் பங்குபெரும் வகையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

நாட்டின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் துவக்க விழா, நாமக்கல் கவிஞர் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள், நாமக்கல் டிரினிட்டி மகளிர் கல்லூரி, டிரினிட்டி சி.பி.எஸ்.சி பள்ளி, நாமக்கல் குறிஞ்சி கல்வி நிறுவனங்கள், பேளுக்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மேலும் வருகிற 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் அனைத்து நிகழ்வுகளையும் பொதுமக்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய அனைவரும் காணும் வகையில் டிஎன்ஜிஐஎம்.2024.காம் என்ற வெப்சைட்டில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அனைவரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் அனைத்து நிகழ்வுகளையும் கண்டு பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 5 Jan 2024 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு