/* */

நேரு பிறந்த நாளையொட்டி நாமக்கல்லில் மாணவர்கள் பேச்சுப்போட்டி

நாமக்கல்லில், முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன

HIGHLIGHTS

நேரு பிறந்த நாளையொட்டி நாமக்கல்லில் மாணவர்கள் பேச்சுப்போட்டி
X

நாமக்கல்லில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி நடைபெற்றது.

நாமக்கல் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தேசத்தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கார், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதையொட்டி நாமக்கல் தெற்கு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.

போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தனித்தனியே பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ஜோதி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Updated On: 14 Nov 2021 9:30 AM GMT

Related News