நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா: ஆட்சியர் பரிசுகள் வழங்கல்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்ட பொங்கல் திரு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா விழாவில் கலந்துகொண்டனர்.
பொங்கல் விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையி, செய்தி மக்கள் தொடர்புத்துறையி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மகளிர் திட்டம், மாவட்ட விளையாட்டு துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட கருவூல அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டாடினர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கோலப்போட்டி, கயிறு இழுத்தல், உரி அடித்தல், மியூசிக் சேர், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், லெமன் அன் ஸ்பூன் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு மாவட்ட கலெக்டர் உமா பரிசுகளை வழங்கினார்.
மேலும், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கி, பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ சுமன், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் அருளரசு, மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் மாதவன் (பொது), அபர்ணா தேவி (கணக்கு), தங்கவேல் (வளர்ச்சி), ராமச்சந்திரன் (வேளாண்மை), ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா உட்பட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.