/* */

நாமக்கல் அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை

நாமக்கல் அருகே கூனவேலம்பட்டியில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

நாமக்கல் அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், கூனவேலம்பட்டியைச் சேர்ந்தவர் ராமன் (65) கூலித்தொழிலாளி. அவர் கால் வலி உள்ளிட்ட நோயால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் தீரவில்லை. இதுனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமன் பரிதாபமாக இறந்தார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது மகன் சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Sep 2021 2:00 AM GMT

Related News