/* */

நாமகிரிப்பேட்டையில் மாயமான நீட் தேர்வு மாணவி: தேனி மாவட்ட காவல் நிலையத்தில் தஞ்சம்

நாமகிரிப்பேட்டையில் காணாமல் போன நீட் தேர்வு எழுதிய மாணவி, தேனி மாவட்ட காவல் நிலையத்தில் இளைஞருடன் தஞ்சம் அடைந்துள்ளார்.

HIGHLIGHTS

நாமகிரிப்பேட்டையில் மாயமான நீட் தேர்வு மாணவி: தேனி மாவட்ட காவல் நிலையத்தில் தஞ்சம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் தாலுக்கா நாமகிரிப்பேட்டை கிழக்குத் தெருவை சேர்ந்தவர் செந்தில் பாண்டியன். இவரது 19 வயது மகள், பிளஸ் 2 முடித்துள்ளார். அவர், நாமக்கல் தனியார் பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி வகுப்புக்குச் சென்று தேர்வுக்காக படித்து வந்தார்.

கடந்த 12ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை எழுதி உள்ளார். ஆனால், தேர்வை சரியாக எழுதவில்லை என அவர் வீட்டில் கூறியுள்ளார். இந்தநிலையில், சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள், உறவினர் மற்றும் மகளின் தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதையடுத்து அவர்கள் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நாமக்கல் எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின்படி, போலீசார் தனிப்படை அமைத்து, மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், தேனி மாவட்டம், உத்தமபாளையம் போலீஸ் ஸ்டேசனில் இளைஞர் ஒருவருடன், நாமகிரிப்பேட்டை மாணவி தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, நாமக்கல் எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் நிருபர்களிடம் கூறுகையில், மாணவி காணாமல் போனதால், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அவரது புகைப்படத்தை அனுப்பி தேடும் பணியை மேற்கொண்டோம். இந்த நிலையில், தேனி மாவட்டம், உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் திருமணம் செய்து கொண்டாரா என்பது குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை. தொடர்ந்து விசாரனை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

Updated On: 19 Sep 2021 10:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...